ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தேசிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

லடாக் விவகாரம், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து இருப்பது முக்கியத்துவ வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com