கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநில கனமழைக்கு 162 பேர் பலி

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநில கனமழைக்கு இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ராவில் 30 பேர், குஜராத்தில் 98 பேர், கேரளாவில் 28 பேர், கர்நாடகாவில் 6 பேர் என மெத்தம் 162 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com