“3 அணிகள்... 100 கோல்கள்” - கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

பார்சிலோனா, அர்ஜென்டினா மற்றும் இன்டர் மியாமி ஆகிய 3 அணிகளுக்காக மெஸ்ஸி தலா 100 கோல்களை அடித்துள்ளார்.
மெஸ்ஸி
Published on

மியாமி,

லியோனல் மெஸ்ஸி மீண்டும் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

100 கோல்கள்

மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையில் பார்சிலோனா, அர்ஜென்டினா மற்றும் இன்டர் மியாமி ஆகிய 3 அணிகளுக்காக தலா 100 கோல்களை அடித்துள்ளார்.

பார்சிலோனா

பார்சிலோனா அணிக்காக 2010-ம் ஆண்டு தனது 100-வது கோலை பதிவு செய்தார் மெஸ்ஸி. 188 போட்டிகளில் விளையாடி அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா தேசிய அணிக்காக 100 கோல்களை எட்ட மெஸ்ஸி 174 போட்டிகளில் விளையாடினார். 2023-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதி குராசோ அணிக்கு எதிரான சர்வதேச நட்பு ஆட்டத்தில் தனது 100-வது சர்வதேச கோலை பதிவு செய்து இந்த மைல்கல்லை எட்டினார்.

இன்டர் மியாமி

இன்டர் மியாமி அணிக்காக 115 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 100 கோல்களை பதிவு செய்துள்ளார். நேற்று நடைபெற்ற சாம்பியன் கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்ததன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

இறுதிப்போட்டி

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் சாம்பியன் அணிகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி மற்றும் க்ரூஸ் அஜுல் அணிகள் நேற்று மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரெஸ் வழங்கிய பாஸை தலையால் முட்டி கோலாக்கினார் மெஸ்ஸி. இதன் மூலம் இன்டர் மியாமிக்காக தனது 100-வது கோலை பதிவு செய்தார்.

மெஸ்ஸி அசிஸ்ட்

இதையடுத்து இரண்டாவது பாதியிலும் இன்டர் மியாமி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மெஸ்ஸி வழங்கிய கார்னர் கிக்கை காஸிமிரோ தலையால் முட்டி கோலாக்கினார். இதன் மூலம் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் க்ரூஸ் அஜுலை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com