மதுகுடிக்கும்போது தகராறு, மகனை கத்தியால் குத்திக்கொன்ற கட்டிட தொழிலாளி கைது

கோவை அருகே மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் மகனை கத்தியால் குத்திக்கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
Published on

துடியலூர்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மின்னாராவ்(வயது 46). இவருடைய மனைவி கவுரி(40). இவர்களுக்கு ரேவதி (21) என்ற மகளும், மகேஷ் (17) என்ற மகனும் இருந்தனர்.மின்னாராவ் தனது குடும்பத்துடன் கோவை அருகே கவுண்டம்பாளையம்- இடையர் பாளையம் ரோட்டில் உள்ள சக்திநகரில் தங்கி இருந்து கட்டிடவேலை செய்துவருகிறார்.

ரேவதிக்கு திருமணம் முடிந்து விட்டது. மகன் மகேஷ் கூலிவேலை செய்துவந்தார். தந்தையும், மகனும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மது குடிப்பது வழக்கம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்படும். போதை தெளிந்த பின்னர் 2 பேரும் சமாதானம் அடைந்து விடுவார்கள்.

விடுமுறை நாளான நேற்று மதியம் தந்தையும், மகனும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் மகேஷ் தனது தந்தையை தள்ளிவிட்டார். இதில் அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விழுந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த மின்னாராவ், சமையலறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து, தனது மகன் என்றும் பாராமல்,மகேசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால்மின்னாராவ் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிட்டார்.

இதற்கிடையே மகேசின் நண்பர்கள் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது அங்கு அவர் ரத்த வெள்ளத்தில்பிணமாக கிடந்ததை பார்த்துஅதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல்அறிந்த துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகேசின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் தலைமறைவானமின்னராவைகைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com