எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை
Published on

திருப்பூர்,

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 44). இவர் திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள் கோவில் வீதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் சொந்தமாக அதே பகுதியில் பிரிண்டிங் நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மகளும், சிவசுப்பிரமணியன் (15) என்ற மகனும் உள்ளனர்.

சிவசுப்பிரமணியன் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியானது.

அதில் சிவசுப்பிரமணியன் 247 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இருப்பினும் தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பிரியா தனது தம்பியை காணவில்லை என்று வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு வீட்டினுள் சிவசுப்பிரமணியன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, சத்தம் போட்டார்.

உடனே பெற்றோர் சிவசுப்பிரமணியனை மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிவசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com