ஆட்டோவின் கதவில் அமர்ந்து பயணம் செய்தபோது தலையில் லாரி மோதியதில் மாணவர் சாவு - திசையன்விளை அருகே பரிதாபம்

திசையன்விளை அருகே ஆட்டோவின் கதவில் அமர்ந்து பயணம் செய்தபோது, தலையில் லாரி மோதியதில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
Published on

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தோப்புவிளையை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர். இவருடைய மகன் காட்வின் (வயது 14). இவர் பெட்டைக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் காட்வின் அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவில் தனது ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது காட்வின் ஆட்டோவின் கதவில் அமர்ந்து கொண்டு தலையை வெளியே நீட்டியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிரே செங்கல் லோடு ஏற்றி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக அவரது தலையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காட்வின் உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மினிலாரி டிரைவர் பணகுடி மேலபுதுக்குடியை சேர்ந்த அகிலனை (19) கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com