தமிழகத்தில் 10 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆகவும், அபய் குமார் சிங் ஆயுதப்படை ஏடிஜிபி- ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 10 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
Published on

சென்னை:

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயந்த் முரளி, அபய்குமார் சிங், நிஷா உள்ளிட்ட 10 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்துவந்த ஜெயந்த் முரளி, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங், ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக ஐபிஎஸ் அதிகாரி நிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com