ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

சென்னையில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை - செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ஆட்டோ டிரைவரான இவருக்கும், மற்றொரு ஆட்டோ டிரைவர் கருணாநிதி என்பவருக்கும் சவாரி ஏற்றுவதில் கடந்த 2010-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் செல்வக்குமாரை கருணாநிதி கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர். இந்த வழக்கை சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். அரசு தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வக்கீல் டி.சுரேஷ் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் கருணாநிதிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com