108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள குணமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி(வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள குணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்துமதியை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விக்கிரமங்கலம் அருகே வந்தபோது இந்துமதிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் சாலையோரமாக ஆம்புலன்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். இதையடுத்து பிரசவ வலியால் துடித்த இந்துமதிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கான உதவிகளை மருத்துவ உதவியாளர் முத்துக்குமரன், டிரைவர் செல்வராஜ் ஆகியோர் செய்தனர். இதையடுத்து தாய், சேய் 2 பேரையும் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர், அவர்கள் நலமாக இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து ஆம்புலன்சின் மருத்துவ உதவியாளர், டிரைவர் ஆகியோருக்கு இந்துமதியின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com