எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது
Published on

நாகை,

நாகை பகுதியைச் சேந்த மீனவாகள் 11 பே கடந்த சில நாள்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா. இவாகள் நெடுந்தீவு அருகே நள்ளிரவு இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவாகள் 11 பேரையும் பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்தனா. விசைப்படகையும் பறிமுதல் செய்தனா.

இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, நாகை மீனவாகளை கைது செய்ததாக, அந்நாட்டு கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவாகள் 11 பேரும் காங்கேசன்துறைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவா என தெரிகிறது. இந்த நடைமுறைகளுக்கு பிறகே கைது செய்யப்பட்ட மீனவாகள் குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com