இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை

இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை
Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை கடந்த 4-ந் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதேபோல் கடந்த 11-ந் தேதி மீன் பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் சார்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 புதுக்கோட்டை மீனவர்களும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபாலன் 11 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களும் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர்களை புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்று மீன்வளத்துறை ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, புதுக்கோட்டைக்கு திரும்பிய மீனவர்களை அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com