தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்


தமிழ்நாட்டில் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
x

தமிழகம் முழுவதும் 3 போலீஸ் உயர் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை

தமிழகம் முழுவதும் 18 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இடமாற்றம்:

1) மகேஷ்குமார் - டி.ஐ.ஜி. ஆக இருக்கும் இவர், காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். தற்போது கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

2) ஜெயந்தி- கடலோர பாதுகாப்புக் குழும டி.ஐ.ஜி. ஆக பணியாற்றும் இவர், சென்னை தொழில்நுட்பப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

3) சிபி சக்கரவர்த்தி- தென்சென்னை இணை கமிஷனராக பணியாற்றும் இவர், தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

4) கல்யாண்- சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக உள்ள இவர், தெற்கு மண்டல இணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.

5) திஷா மிட்டல்- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆக உள்ள இவர், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

6) உமா- சேலம் சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றும் இவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

7) நாகஜோதி- மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டாக பொறுப்பேற்க உள்ளார்.

8) அமனத்மான்- காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், மனித உரிமை மற்றும் சமூகநீதி உதவி ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

9) லாவண்யா- போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக சென்னையில் பணியாற்றும் இவர், மாநில குற்ற ஆவண காப்பக சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

10) பி.கீதா- சேலம் தலைமையக துணை கமிஷனராக பணியில் உள்ள இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.

11) வி.கீதா- திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக உள்ள இவர், சேலம் தலைமையக துணை கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.

12) வேல்முருகன்- சேலம் தெற்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், தாம்பரம் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

13) பிரபாகர்- தாம்பரம் கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக உள்ள இவர், சென்னை சைபர் குற்றப்பிரிவு சூப்பிரண்டாக பதவியேற்க உள்ளார்.

14) அருண் கபிலன்- நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி. ஆக பதவியேற்க உள்ளார்.

15) செல்வக்குமார்- மதுரை சிவில் சப்ளை சி.ஐ.டி. சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி உயர்வுடன் இடமாற்றம்:

16) சுப்பிரமணிய பாலச்சந்திரா- தேனி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சேலம் தெற்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

17) சாமுவேல் பிரவீன் கவுதம்- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் இவர், பதவி உயர்வு பெற்று, திருப்பூர் நகர வடக்கு துணை கமிஷனராக பதவியேற்க உள்ளார்.

18) பிரசன்னகுமார்- நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story