தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

ஆரல்வாய்மொழி அருகே வாடகை வீட்டில் விபசாரம் நடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே வாடகை வீட்டில் விபசாரம் நடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் விபசாரம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள கண்ணுபொத்தை 4 வழிசாலையில் உள்ள ஒரு மாடி வீட்டை வள்ளியூர் அருகே உள்ள தளபதிசமுத்திரத்தை சேர்ந்த ஹரிராம ராஜா (வயது 30) என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தார். இவர் அந்த வீட்டை நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் தங்குவதற்காக பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில் அந்த வீட்டில் விபசாரம் நடப்பதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு போலீசார் அங்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கிருந்த ஒரு இளம்பெண்ண மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட ஆல்வின் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவு

இந்தநிலையில் வீட்டை வாடகைக்கு எடுத்த ஹரிராம ராஜா தலைமறைவானார். மேலும் இந்த வழக்கில் சுசீந்திரத்தை சேர்ந்த மகேஷ் (43) என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஹரிராம ராஜா, மகேஷ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி செல்ல முயன்றனர். அதற்குள் போலீசார் மடக்கி பிடித்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com