லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
Published on

அம்பை:

கல்லிடைக்குறிச்சி பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழவைராவிகுளம் பஸ் நிறுத்தம் அருகே கல்லிடைக்குறிச்சி குமார கோவில் நடுத்தெருவை சேர்ந்த குமார் (வயது 45), கீழவைராவிகுளம் ராஜிவ் நகரை சேர்ந்த சங்கரன் (47) ஆகியோர் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com