மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் பிடிபட்டனர்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 28). இவர் நா.மூ.சுங்கம் அருகே உள்ள மதுக்கடைக்கு தனது நண்பர் சிவசங்கரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரிகிறது. பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, 2 பேர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற அந்த நபர்களை துரத்தி பிடித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ரமணமுதலிபுதூரை சேர்ந்த தேவா (24), அதே பகுதியை சேர்ந்த ஜீவா (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com