புகையிலை கடத்திய 2 பேர் சிக்கினர்

புகையிலை கடத்திய 2 பேர் சிக்கினர்
புகையிலை கடத்திய 2 பேர் சிக்கினர்
Published on

சிவகாசி

சிவகாசி டவுன் போலீசார் இரட்டை பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த போது அதில் சுமார் 20 கிலோ புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். இதனை கைப்பற்றிய போலீசார் தாயில்பட்டியை சேர்ந்த காளீஸ்வரன் (வயது24), வரதராஜ்(27) ஆகியோரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com