

சேலம்,
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி அமுதா (வயது 38). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது மர்ம நபர்கள், அமுதா கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்ததுடன், வீட்டில் இருந்த செல்போனையும் திருடி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.