மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் பாதிப்பு
Published on

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 19 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 8 பேர், வீரபாண்டியில் 6 பேர், வாழப்பாடியில் 2 பேர், பனமரத்துப்பட்டியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும், தர்மபுரியில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 101 பேர் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com