தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 20 பேர் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 20 பேர் கைது
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் பணம் கொடுத்தும் கடந்த பல மாதங்களாக நகைகளை திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நகைகளை அடகு வைத்தவர்கள் ஏற்கனவே விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நிதி நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த நிறுவனத்தின் முன்பு அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பணம் கொடுத்தவர்கள் தங்கள் நகைகளை திருப்பி தரக்கோரி மீனாட்சிசுந்தரம் தலைமையில் 20 பேர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இவர்களை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கைது செய்தார். பின்னர் மதியம் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com