மெட்ரோ ரெயில்கள் பராமரிப்பு பணிக்கு ரூ.21 கோடி ஒப்பந்தம்

ரெயில்களை பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல், விசாரணை அலுவலகம் மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 1-ன் கீழ், கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ ரெயில்களை பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல், விசாரணை அலுவலகம் மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தத்தினை ரூ.21.16 கோடி மதிப்பில் மெம்கோ அசோசியேட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் வழங்கியது.

அதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் மெம்கோ அசோசியேட்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் வீராகுமார் நேற்று கையொழுத்திட்டனர்.

இந்தநிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், துணை பொது மேலாளர் பாலமுருகன், மெம்கோவின் முதன்மை செயல் அதிகாரி ஜோஷ்வா ராஜ்குமார் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com