மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பாதிப்பு

மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு 21 பேர் பாதிப்பு
Published on

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 22 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 21 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 6 பேர், கொளத்தூரில் 3 பேர், மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com