அமைந்தகரையில் வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது

அமைந்தகரையில் வாலிபர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அமைந்தகரையில் வாலிபர் கொலையில் மேலும் 3 பேர் கைது
Published on

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த வாரம் அமைந்தகரை வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற ஆறுமுகத்தை மர்மநபர்கள் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலையில் சந்திரசேகர், ரோகித்ராஜ் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரையும் அமைந்தகரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்து நேற்று இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக கோர்ட்டில் பிரவீன் என்பவர் சரண் அடைந்தார். அவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரை விசாரணை முடிந்து இன்று(வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இந்த நிலையில் ஆறுமுகம் கொலை வழக்கு தொடர்பாக ஸ்டீபன், அஜித், செந்தில் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com