மது விற்ற 3 பேர் கைது; 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 3 பேர் கைது; 40 மதுபாட்டில்கள் பறிமுதல்
மது விற்ற 3 பேர் கைது; 40 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

சமயபுரம்:

லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்படி, சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேற்று சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுகனூர் அருகே உள்ள எதுமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (வயது 53), எதுமலை இந்திரா காலனியை சேர்ந்த சகாதேவன்(39), நல்லேந்திரபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(45) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 40 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com