காட்டாங்கொளத்தூர் அருகே மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது

காட்டாங்கொளத்தூர் அருகே மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காட்டாங்கொளத்தூர் அருகே மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள காவனூர் மெயின் ரோடு பகுதியில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் காவனூர் சாலையில் மது விற்பனை செய்து கொண்டிருந்த பாபு (வயது 51), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல காட்டாங்கொளத்தூர் திருப்பன ஆழ்வார் தெருவில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சித்ரா (வயது 40), வள்ளி (57) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com