கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சட்டசபையில் கேள்வி எழுப்பிய உதயநிதி

மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அவருடைய குடும்பத்துடன் துணை நிற்க வேண்டும்.
கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சட்டசபையில் கேள்வி எழுப்பிய உதயநிதி
Published on

சென்னை,

கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் இன்று (ஆக. 25) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக குற்றச்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த உதயநிதி பேசியதாவது:

போதுமான நிதி உதவி

இறந்த தமிழர்களின் உடற்கூராய்வு விவரங்கள் வெளியே வந்துள்ளது. அதில் கொடூரமாக, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர்நிலை நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரியிடமிருந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டுள்ளதா? மூன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அவருடைய குடும்பத்துடன் துணை நிற்க வேண்டும். அந்தக் குடும்பங்களுக்கு போதுமான நிதி உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

இவ்வாரு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com