

மே 2-ந் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை ஐகோர்ட்டு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு தற்போதுள்ள 3 அடுக்கு பாதுகாப்பே தொடரும். வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணி, போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை திட்டமிட்டபடி மே 2-ந் தேதி நடைபெறும். அது தள்ளிப்போக எந்த வாய்ப்பும் இல்லை.அது குறித்து ஆலோசிக்கவும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.