நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 வாலிபர்கள் கைது

நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 வாலிபர்கள் கைது
Published on

அறந்தாங்கி பகுதியில் நிதிநிறுவனத்தை சபரிநாதன் (வயது 35), அஜித்குமார் (32), சதீஷ் குமார் (29) ஆகியோர் நடத்தி வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் அதற்கு இரு மடங்காக பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் வசூல் செய்து உள்ளனர். ஆனால் பொதுமக்கள் அவர்கள் கூறிய காலக்கெடுவிற்குள் பணத்தை செலுத்தியும், இரு மடங்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது எந்த பதிலும் கூறவில்லை. மேலும் நாங்கள் செலுத்திய பணத்தையாவது கொடுங்கள் என்று கேட்டால் அதுவும் கொடுக்கவில்லை. இதுகுறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புதுக்கோட்டை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சபரிநாதன் உள்பட 3 பேரையும் கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com