அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்


அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்
x

தூத்துக்குடி, கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் நாளை அவரது 315வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர், கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் அவரது 315வது பிறந்தநாள் விழா நாளை (11.7.2025) நடைபெற உள்ளது. அவரது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று (10.7.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அவரது மணிமண்டபத்திற்கு நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கோவில்பட்டி K.R.பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. தலைமையில் 4 ஏ.டி.எஸ்.பி.க்கள், 16 டி.எஸ்.பி.க்கள், 45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஜெயந்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். இதில் தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு, சகாயஜோஸ் மற்றும் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story