32 புதிய கான்கிரீட் வீடுகள் - சந்தோஷத்தில் திகைத்த பழங்குடியின மக்கள்

தேனி மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம், ராசிமலை வனப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வந்த வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதையடுத்து, தற்போது அப்பகுதி மக்களுக்கு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 32 கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com