108 ஆம்புலன்சு சேவையால் 37,562 பேர் பயன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்சு சேவையால் 37,562 பேர் பயன் 96 கர்ப்பிணிகளுக்கு வாகனத்திலேயே பிரசவம்
108 ஆம்புலன்சு சேவையால் 37,562 பேர் பயன்
Published on

கள்ளக்குறிச்சி\

கள்ளக்குறிச்சி மாவட்ட 108 ஆம்புலன்சு மேலாளர் அறிவுக்கரசு கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 29 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்சு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வாகனங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கானவை. 100-க்கு மேற்பட்ட டிரைவர்கள் மற்றும்மருத்துவ உதவியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நோயாளி இருக்கும் இடத்துக்கு சராசரி 14 நிமிடங்களில் 108 ஆம்புலன்சு செல்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் 3,152 பேர், பிப்ரவரி-2,807, மார்ச்-2,777, ஏப்ரல்-2,837, மே-3,124, ஜூன்-2,894, ஜூலை-3,009, ஆகஸ்டு-3,255, செப்டம்பர்-3,664, அக்டோபர்-3,438, நவம்பர்-3,309, டிசம்பர்-3,296 என மொத்தம் 37 ஆயிரத்து 562 பேர் பயன் அடைந்துள்ளனர். இதில் சாலை விபத்தில் 6,451 பேர், கர்ப்பிணிகள் 14,271 பேர், பயனடைந்துள்ளனர். 96 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சுக்குள்ளேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சேவையை விட 2022-ம் ஆண்டில் 108 ஆம்புலன்சு மூலம் 4,492 பேர் கூடுதலாக பயன் அடைந்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 33 ஆயிரத்து 70 பேர் ஆம்புலன்சு சேவையால் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com