லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது

பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
Published on

பேட்டை:

பேட்டையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த வீரபத்திரன் (வயது 48), மாரியப்பன் (52), சிந்துபூந்துறையை சேர்ந்த சண்முகம் (57), பாளையங்கோட்டையை சேர்ந்த முகமது நாசிக் (61) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com