4 பேர் காயம்

வடமதுரை அருகே ஆட்டோ மீது வேன் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.
4 பேர் காயம்
Published on

வடமதுரை அருகே உள்ள முத்தனாங்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவர் ஒரு ஆட்டோவில் தனது நண்பர்களான வடமதுரை தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (19), அழகர்சாமி (23) ஆகியோருடன் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலயத்திற்கு டீசல் போட சென்றார். பின்னர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வடமதுரை நோக்கி சென்றனர்.

வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வேங்கனூரை சேர்ந்த அஜித் (21) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேனும், ஆட்டோவும் மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஆட்டோவில் இருந்த அழகர்சாமி படுகாயமடைந்தார். இேத பால் கார்த்திக், சுரேஷ், அஜித் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அழகர்சாமி திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com