4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வருகிறது - தமிழக சுகாதாரத்துறை தகவல்

4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
4.2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வருகிறது - தமிழக சுகாதாரத்துறை தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தற்போது தமிழக மக்கள் மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால் தமிழகத்தில் 3-ந் தேதி முதல் 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறினார்.

இந்நிலையில், இன்று மாலை மேலும் 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தடையும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியானது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக ஒதுக்கப்பட்டது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை வரும் தடுப்பூசிகள் இன்று இரவே மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி, தடங்கலின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com