

ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.36 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குந்துகால் கடல் பகுதி வழியாக இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்தவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4.36 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.