சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது
Published on

சேமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள கிரீக்கல்மேடு நடுஆற்றங்கரையில் அரசு அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக சோமரசம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 30), முதலைப்பட்டியை சேர்ந்த அன்பரசன்(21), சுண்ணாம்புகாரன் பட்டியை சேர்ந்த கருப்பன்(24), கிரீக்கல்மேடு தெற்கு தெருவை சேர்ந்த முருகன்(30) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.750 மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் முசிறியை அடுத்த ஆனைப்பட்டி கிராம குட்டை அருகே கீழ வடுகப்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் விக்னேஷ் (25), சேகர் மகன் விக்னேஸ்வரன் (25) ஆகியோர் அனுமதியின்றி சேவல் சண்டைக்கு பணம் கட்டி பந்தயம் வைத்ததாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பந்தயம் கட்டியிருந்த ரூ.800-ஐ பறிமுதல் செய்து, 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com