பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

ஆலங்குடியில் பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற பொதுமக்கள் 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Published on

5 பவுன் சங்கிலி பறிப்பு

ஆலங்குடி அருகே கல்லாலங்குடியை சேர்ந்தவர் லாரி டிரைவர் திருப்பதி. இவரது மனைவி சத்யாதேவி (வயது 35). இவர், நேற்று காய்கறிகள் வாங்குவதற்காக ஆலங்குடி வாரச்சந்தைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வடகாடு முக்கத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சத்யாதேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனை பார்த்த ஆலங்குடியை சேர்ந்த வாலிபர் தினேஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் மர்மநபர்களை விரட்டி சென்றார். இதற்கிடைய மேட்டுப்பட்டியில் உள்ள தனது நண்பர்களுக்கும் செல்போன் மூலம் நடந்த தகவலை கூறி மர்மநபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் விவரத்தையும் கூறியுள்ளார்.

மர்மநபர்களுக்கு தர்ம அடி

இதையடுத்து அந்த வாலிபர் 20 கி.மீட்டர் விரட்டி சென்று மேட்டுப்பட்டி என்ற இடத்தில் அந்த பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் உதவியுடன் 3 மர்மநபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 3 மர்மநபர்களையும் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் 3 பேரும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத் தை சேர்ந்தவர்கள் என்பது தரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com