குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் காந்தி தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 38), இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் சொர்ணலட்சுமி (12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவர் வீட்டின் அருகிலேயே நடந்து வரும் டியூஷனுக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அவரது தாய் சென்று பார்த்தபோது சொர்ண லட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சொர்ணலட்சுமியை மீட்டு பார்த்தபோது அவர் இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சொர்ணலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com