தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
*சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமனம்
*சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனிஷா உசேன் நியமனம்
*சென்னை கிழக்கு இணை ஆணையர் விஜயகுமார் பணியிட மாற்றம்
*கிழக்கு காவல்துறை இணை ஆணையராக பண்டி கங்காதர் நியமனம்
*சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக விஜயகுமார் நியமனம்
* சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்
* சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக சுகாஷினி ஐபிஎஸ் நியமனம்
*காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை குற்றப்பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளராக பி.எச்.ஷாஜிதா நியமனம்.
*கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக திவ்யா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.






