அருணாசலேஸ்வரரை தரிசிக்க 3 கிலோ தங்க நகைகள் அணிந்து வந்த தொழிலதிபர்

கழுத்து மற்றும் கை நிறைய சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் அணிந்தபடி கோவிலுக்கு வந்தார்.
அருணாசலேஸ்வரரை தரிசிக்க 3 கிலோ தங்க நகைகள் அணிந்து வந்த தொழிலதிபர்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார்.

இவர் துபாயில் ஓட்டல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கழுத்து மற்றும் கை நிறைய சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் அணிந்தபடி வந்தார். கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com