நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி: மேளதாளங்களுடன் சீர்வரிசை வழங்கி மிரளவிட்ட ஊர்மக்கள்...

பாரம்பரிய மேளதாளங்கள் மற்றும் தாரைத் தப்பட்டை முழங்க, சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டன.
நூற்றாண்டு கண்ட அரசு பள்ளிக்கு ஊர் மக்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை வழங்கி மகிழ்ந்தனர்.
அரசுப்பள்ளி நூற்றாண்டு விழா
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணியாற்றி வரும் ஒரு அரசுப் பள்ளிக்கு, கிராம மக்கள் மேளதாளங்களுடன் சீர்வரிசை கொண்டு சென்றனர்.

100 ஆண்டுகள் கடந்த அரசுப்பள்ளி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை, அந்த கிராம மக்கள் கொண்டாட விரும்பினர். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் கல்விச் சீர்வரிசை வழங்கும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக நடந்து வருகிறது. அந்த வகையில், 100 ஆண்டுகளைக் கடந்து கல்விப் பணியாற்றி வரும் அந்த அரசுப் பள்ளிக்கு விழா நடத்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகள்

கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டுக்களில் நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், மின்விசிறிகள் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேலும், பாரம்பரிய மேளதாளங்கள் மற்றும் தாரைத் தப்பட்டை முழங்க, உற்சாக ஆட்டத்துடன் சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாகப் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் பள்ளியின் நூற்றாண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

அரசுப் பள்ளி மீதும், அங்கு படிக்கும் குழந்தைகள் மீதும் கிராம மக்கள் வைத்துள்ள பற்றை இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நூற்றாண்டு கண்ட பள்ளியையும், அதன் ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் கிராமமே திரண்டு நடத்திய இந்த விழா தற்பொழுது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com