பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்ததில் தலை நசுங்கி பலி..!

திருவண்ணாமலை அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்ததில் தலை நசுங்கி பலி..!
Published on

திருவண்ணாமலை,

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி. இவரது மகன் அசோக்குமார் (17). இவர் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். அசோக் குமார் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம் பாடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கிக்கொண்டு தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற அசோக் குமார் மாலை கல்லூரி முடிந்து கீழ்பென்னாத்தூர் வந்தார். அங்கிருந்து தனியார் பஸ்ஸில் கரிக்கலாம்பாடி செல்வதற்கு முன்பக்க படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி தவறி விழுந்த அசோக்குமாரின் தலையின் மீது பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கியதில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்த அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இறந்தஅசோக்குமாரின் தந்தை அருள்மணி கீழ்பென்னாத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவரின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com