இரு தரப்பினரிடையே மோதல்

புதுக்கோட்டை போஸ்நகரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரிடையே மோதல்
Published on

புதுக்கோட்டை போஸ்நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 560 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் வீடுகள் ஒதுக்கி வழங்கப்பட்ட போது தலா ரூ.1 லட்சம் தொகை நிர்ணயிக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் செலவின அதிகரிப்பால் கூடுதலாக ரூ.50 ஆயிரம் கட்டணமாக செலுத்த அரசு தரப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு கூடுதல் தொகையை செலுத்த பயனாளிகள் மறுத்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர். இந்த நிலையில் கூடுதல் தொகையை செலுத்துவது தொடர்பாக போஸ்நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின் அப்பகுதி மக்களால் அமைக்கப்பட்ட மக்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதற்கிடையில் ஒரு தரப்பினர் தங்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பிருந்தாவனத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கணேஷ்நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய பின் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com