பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு தேர்வு எப்போது நடைபெறும் என்பதை 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமே தவிர, தேர்வுகள் ரத்து செய்யப்படமாட்டாது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். 12-ம் வகுப்பைப் பொருதத்தவரை நடப்பு கல்வியாண்டில் பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை.

தனியார் பள்ளிகளில் ஓடாத பஸ், போடாத சீருடைக்கு கட்டணம் வசூல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசுலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com