

ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது ஆடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.