நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்

நடுரோட்டில் அரசு பஸ்பழுதாகி நின்ற து.
நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்
Published on

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மண்டைக்காடுக்கு அரசு சிறப்பு பஸ் ஒன்று நேற்று இரவு 7.45 மணி அளவில் புறப்பட்டது. அந்த பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவு வந்ததும் கேப் ரோட்டில் திடீரென பழுதாகி நின்றது. இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு அங்கிருந்து பஸ்சை எடுத்துச்சென்ற பிறகு போக்குவரத்து சீரானது. பழுதாகி நின்ற அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com