சட்டக்கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு- 4 பேருக்கு வலைவீச்சு

சட்டக்கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு- 4 பேருக்கு வலைவீச்சு
சட்டக்கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு- 4 பேருக்கு வலைவீச்சு
Published on

வாடிப்பட்டி, 

மதுரை காம்பாளையம் 4-வது தெருவில் வசித்து வருபவர் ஞானேஸ்வரன். இவரது மகன் பாலாஜி (வயது 27). இவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் 5-ம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தீபாவளிக்காக மதுரைக்கு வந்தார். இவர் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த நண்பர் இஸ்மாயில் என்பவரை அழைத்துக் கொண்டு வாடிப்பட்டி பகுதி ஓடையில் குளிக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வாடிப்பட்டி அருகே அய்யன்கோட்டை உணவு விடுதிக்கு பின்பு உள்ள ஓடை பகுதியில் சென்றபோது அங்கு 4 மர்ம நபர்கள் வந்தனர். அதில் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி பாலாஜி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலி, இஸ்மாயிலிடம் இருந்த ரூ.3,500,செல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும் பாலாஜியின் ஏ.டி.எம். கார்டை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com