மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் விஷம் கலந்து குடித்தவர் இறந்தார்.
மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சாவு
Published on

நெமிலி

மதுவில் விஷம் கலந்து குடித்தவர் இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகன் தீனன்குமார் (வயது 43). திருமணம் ஆகாதவர். இவர், சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீனன்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவனையிலும், பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com