

ஆலங்குடி காமராஜர் சிலை அருகே மருந்து கடை ஒன்று உள்ளது. நேற்று மாலை அந்த கடைக்கு உள்ளே பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடையில் உள்ளே பாம்பை தேடி பார்த்தனர். ஆனால் சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.