ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து சாவு

ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து இறந்தார்.
ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து சாவு
Published on

அரியலூர் மின் நகரை சேர்ந்தவர் பூபாலன்(வயது 59). இவர் அரியலூர் அருகே உள்ள கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர், போலீசாருடன் கிராமப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு விருத்தாம்பாள் என்ற மனைவியும், பார்த்திபன், சுபாஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். பூபாலனின் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிச்சடங்கின்போது, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடலை தகனம் செய்ய போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com