கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்
கும்மிடிப்பூண்டியில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மகாலிங்க நகரை சேர்ந்தவர் மகேஷ் (34). திருமணம் ஆகாத இவர், அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று எளாவூரில் இருந்து பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் மகஷ் சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது சாலை நடுவே உள்ள சிமெண்ட் தடுப்பில் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த மகேஷ், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவெற்றியூரை சேர்ந்தவர் அன்பு கண்ணன் (வயது 48). எலக்ட்ரீசியன். கடந்த 8-ந் தேதி தனது மனைவி அனு (40) மற்றும் மகன் சரத் (10) ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் அன்பு கண்ணன் சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே வரும்போது, அதே திசையில்சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அன்புகண்ணன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com